நில வரைபடத்தைக்கொண்டு ஊர்களுக்கிடையேயான தூரத்தை தெரிந்துகொள்ளச்செய்யலாம்.
இந்திய வரைபடத்தைக்கொடுத்து சென்னைக்கும் மும்பைக்கும் இடையே வரை படத்தில் உள்ள தூரத்தை அளவுகோலால் அளந்து செண்டிமீட்டரில் எழுதிக்கொள்ள வேண்டும் வரைபடத்தில் உள்ள அளவு திட்ட்த்தில் ஒரு செண்டிமீட்டருக்கு எத்தனை கிலோமீட்டர் என குறிப்பிடப்பட்டிருக்கும். அதைக்கொண்டு இரண்டு ஊர்களுக்கு இடையே உள்ள உண்மையான தொலைவைக்கண்டறியலாம்.
மாதிரி கணக்கு: படத்தின் அளவுத்திட்டம் 1 செ.மீ. = 43கி.மீ.
சென்னை மும்பை இடையே வரைபடத்தில் உள்ள தொலைவு = 23 செ.மீ.
சென்னை மும்பை இடையே உண்மையான தொலைவு = 23 X 43 = 989 கிமீ
இதுபோல் வெவ்வேறு நகரங்களுக்கு இடைப்பட்ட தூரத்தை அளந்து உண்மையான தொலைவைக் கணக்கிடச்செய்து மதிப்பிடலாம்.
6ஆம் வகுப்பு, கணக்கு, அன்றாட கணிதம்
இரத்தின புகழேந்தி,அரசு உயர்நிலைப்பள்ளி ,மன்னம்பாடி