ஆயத்தொலை வடிவக்கணிதம் என்பது கார்ட்டீசியன் ஆயத்தொலை முறையைப் புரிந்துகொள்ளுதலாகும். மேலும் x மற்றும் y ஆயத்தொலைவுகளை அறிந்துகொள்வதும் கார்ட்டீசியன் தளத்தில் புள்ளிகளைக் குறிக்க அறிந்துகொள்வதுமாகும்.
புள்ளிகளை வரைபடத்தாளில் குறிப்பதற்கு செயல்பாடுகள் மூலம் பயிற்சி அளித்து எளிதாக்கலாம். படத்தில் காடியுள்ள செயல்பாட்டினை மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வமாக செய்வார்கள்.வரைபடத்தாளிலோ அல்லது வரைபட பலகையிலோ கொடுக்கப்பட்ட புள்ளிகளை மாணவர்கள் ஒவ்வொருவராய் அழைத்து குறிக்கச்செய்யவேண்டும். அப்புள்ளிகளை இணைத்து கோடுகள் வரைந்தால் ஒரு உருவம் கிடைக்கும். என்ன உருவம் என்பதைப் பார்க்க மாணவர்கள் ஆவலோடு புள்ளிகளை குறித்து கோடு வரைவார்கள். கிடைக்கும் படத்தைப் பார்க்கும்போது மாணவர்களிடையே மனமகிழ்ச்சி ஏற்படும். அதன் மூலம் அவர்களுக்கு கணக்கும் இனிக்கும்.
9 ஆம் வகுப்பு , கணக்கு, ஆயத்தொலைவடிவக் கணிதம் பாடத்திற்கான செயல்பாடு.